உள்ளூர் செய்திகள்

உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

Published On 2022-12-18 09:49 GMT   |   Update On 2022-12-18 09:49 GMT
  • 2013-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.
  • விசாரணைக்கு ஆஜராவதற்கு பாபநாசம் கோர்ட்டு மூலம் சம்மன் அனுப்பி இருந்தனர்.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, அம்மாபேட்டை காவல் நிலையத்தில் 2012-ல் உள்ள வழக்கு சம்பந்தமாக பாபநாசம் நீதிமன்றத்தில்
2013-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில் சாட்சியாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் அப்போது சப்-இன்ஸ்பெக்டராக ராஜா பணியில் இருந்த போது வழக்கு பதிவு செய்தமைக்காக வழக்கின் விசாரணைக்கு சாட்சி சொல்ல ஆஜராவதற்கு பாபநாசம் கோர்ட்டின் மூலம் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு அம்மாபேட்டை சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜா ஆஜராகவில்லை.

சாட்சி சொல்ல விசா–ரணைக்கு அம்மாபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆஜராகாத காரணத்தால் பாபநாசம் மாவட்ட உரிமைகள் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கனி ராஜா மீது பிடி கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டார்.

அம்மாபேட்டையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தற்போது திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News