உள்ளூர் செய்திகள்

பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு

Published On 2023-04-25 10:13 GMT   |   Update On 2023-04-25 10:13 GMT
  • பேராவூரணியில் அரசு காமராஜர் ஆஸ்பத்திரி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
  • 100-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேராவூரணி:

பேராவூரணியில் அரசு காமராஜர் மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

30-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நவீன உபகரணங்களுடன் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து பேசி னார்.

அதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன், பேராவூரணி அரசு காமராசர் மருத்துவ மனை மேம்பாட்டிற்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சருக்கும், சுகாதாரத்துறை அமை ச்சருக்கும் பேராவூரணி தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அசோக்குமார் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News