உள்ளூர் செய்திகள்

இன்ஸ்பெக்டர் அமுதாராணியிடம் இஸ்லாமிய கூட்டமைப்பினர் புகார் மனு.

அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-19 08:00 GMT   |   Update On 2022-06-19 08:00 GMT
  • நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜகவின் நுபுர்சர்மா, நவீன்ஜிண்டாவை கைது செய்ய வலியுறுத்தினர்.
  • இதேபோல் தைக்கால் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜமாஅத் தலைவர் ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்தார்.

சீர்காழி:

சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதியில் அனைத்து இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜகவின் நுபுர்சர்மா, நவீன்ஜிண்டாவை கைது செய்ய வலியுறுத்தி சிறப்பு தொழுகை முடிந்ததும் சீர்காழி தாலுக்கா முழுவதும் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் முன்பு ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய இயங்கங்கள் ஒன்று சேர்ந்து முகம்மது நபியை இழிவாக பேசியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் சீர்காழி போலீசில் மனு அளித்தனர். இதேபோல் தைக்கால் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜமாஅத் தலைவர் ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்தார். சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முகம்மதுயூசுப் கண்டன முழக்கங்களை எழுப்பினனார்.பின்னர் கொள்ளிடம் போலீசில் இன்ஸ்பெக்டர் அமுதா ராணியிடம் புகார்மனு அளித்தனர்.

Tags:    

Similar News