உள்ளூர் செய்திகள்

எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்

Published On 2022-11-30 09:53 GMT   |   Update On 2022-11-30 09:53 GMT
  • எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
  • பொதுமக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

மாரண்ட‌அள்ளி,

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாரண்ட‌அள்ளி பேரூராட்சித் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் எய்ட்ஸ் குறித்த பல்வேறு தகவல்களை நாட்டுப்புற நிகழ்ச்சிகள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாரண்டஅள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரை கனி, கவுன்சிலர் வெங்கடேசன் மணிவண்ணன் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் ஊழியர்கள், பொதுமக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

Tags:    

Similar News