வாலிபர் கொலை வழக்கு; கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
- அம்மன்பேட்டை பைபாஸ் சாலை அருகே பிரேம் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
- கலெக்டர் உத்தரவுபடி மணிகண்டன், விஸ்வபிரசாத் ஆகிய 2 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பள்ளியக்ரஹா ரம் சின்னத்தெருவை சேர்ந்தவர் பிரேம் (வயது 30). நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏற்கனவே காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த மாதம் அம்மன்பேட்டை பைபாஸ் சாலை அருகே அரிவாளால் வெட்டி கொலை செய்யப்ப ட்டார்.
இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மனக்கரம்பையை சேர்ந்த விஸ்வ பிரசாத், பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சிலரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்களில் மணிகண்டன், விஸ்வபிரசாத் ஆகிய 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி மணிகண்டன், விஸ்வபிரசாத் ஆகிய 2 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த உத்தரவு நகல்களை திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.