உள்ளூர் செய்திகள்

மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிதி உதவி

Published On 2022-08-06 08:29 GMT   |   Update On 2022-08-06 08:29 GMT
  • ஊட்டி காந்தல் பகுதியில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன.
  • சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு உடனடியாக நிதி உதவி வழங்கப்பட்டது.

ஊட்டி 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்துவரும் நிலையில் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட காந்தல் பகுதியில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன.


இதுபற்றி அறிந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் நேரில் சென்று சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு அவர்களுக்கு உடனடியாக நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார். அவருடன் அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், நகர மன்ற உறுப்பினரும், பாசறை மாவட்ட செயலாளருமான அக்கீம்பாபு, நகரமன்ற உறுப்பினர் லயோலோகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.  

Tags:    

Similar News