உள்ளூர் செய்திகள்

தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-05 14:43 IST   |   Update On 2023-10-05 14:43:00 IST
  • அ.தி.மு.க. சார்பில் கிழக்கு தாம்பரம் வால்மீகி தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • முன்னாள் அமைச்சரும் மாநில மகளிர் அணி செயலாளருமான வளர்மதி தலைமை தாங்கினார்.

தாம்பரம்:

தாம்பரம் மாநகராட்சி, 5-வது மண்டலத்தில் அடிப்படை வசதிகளை முறையாக செய்யாதது, சாலை அமைத்ததில் முறைகேடு உள்ளிட்டவற்றை கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கிழக்கு தாம்பரம் வால்மீகி தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் மாநில மகளிர் அணி செயலாளருமான வளர்மதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கனிதா சம்பத், ப.தன்சிங் மாவட்ட பொருளாளர் பரசுராமன், பகுதி செயலாளர்கள் மோகன்,ஜெய் பிரகாஷ், வெங்கடேசன், அருணாச்சலம், வழக்கறிஞர் சதீஷ், கூத்தன், கோபிநாதன் எல்லார் செழியன், தேவேந்திரன், கவுன்சிலர்கள் சேலையூர் சங்கர், வாட்டர் ராஜ், சாய் கணேஷ் மாவட்ட இளைஞரணி செயலாளர் புருஷோத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News