உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

புகையிலை விற்ற அ.தி.மு.க பிரமுகர் கைது

Published On 2022-06-08 04:37 GMT   |   Update On 2022-06-08 04:37 GMT
  • தமிழகத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது
  • வத்தலக்குண்டு பகுதியில் தொடர்ந்து குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இருந்தபோதும் குட்கா விற்பனை குறைந்தபாடில்லை.

வத்தலக்குண்டு :

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பஸ்நிலையம் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு முக்கிய சந்திப்பாக உள்ளது. கொடைக்கானல், மூணாறு, தேக்கடி உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு வத்தலக்குண்டு வழியாக சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால் பஸ்நிலையத்தில் குடிமகன்கள் மற்றும் பிக்பாக்கெட் திருடர்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் வத்தலக்குண்டு பகுதியில் தொடர்ந்து குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இருந்தபோதும் குட்கா விற்பனை குறைந்தபாடில்லை.

பட்டிவீரன்பட்டி குறுக்குேராடு கன்னிமார்கோவில் தெருவைசேர்ந்தவர் நாசர்முகமது(42). அ.தி.மு.க பிரமுகரான இவர் எம்.ஜி.ஆர் மன்ற நகர செயலாளராக உள்ளார். வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்த கடையில் பதுக்கி குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வத்தலக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா தலைமையில் போலீசார் கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்ட குட்காவை பறிமுதல் செய்து நாசரை கைது செய்தனர். வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் அதிகளவு பயணிகள் வந்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News