உள்ளூர் செய்திகள்

தென்காசியில் தி.மு.க. சார்பில் இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை

Published On 2023-10-19 14:18 IST   |   Update On 2023-10-19 14:22:00 IST
  • இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் தொடங்கப்பட்டது.
  • நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் கலந்து கொண்டனர்.

தென்காசி:

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அப்துல் ரஹிம் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார், ஐவேந்திரன், கிருஷ்ண ராஜ், சுப்பிரமணியன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News