உள்ளூர் செய்திகள்

பயின்றோர் கழக ஆண்டு விழா நடைபெற்ற போது எடுத்த படம்.


ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக ஆண்டு விழா

Published On 2022-08-18 08:59 GMT   |   Update On 2022-08-18 08:59 GMT
  • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக ஆண்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வரும், பயின்றோர் கழக தலைவருமான மகேந்திரன் தலைமை தாங்கினார்.
  • ஆறுமுகநேரி பாரத ஸ்டேட் வங்கி மேலாளரும், பயின்றோர் கழக உறுப்பினருமான சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக ஆண்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வரும், பயின்றோர் கழக தலைவருமான மகேந்திரன் தலைமை தாங்கினார். பயின்றோர் கழக துணைத்தலைவர் ஜெயபோஸ் வரவேற்று பேசினார். இணை செயலாளரும், தமிழ்துறைத் தலைவருமான கதிரேசன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பகவதிபாண்டியன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

ஆறுமுகநேரி பாரத ஸ்டேட் வங்கி மேலாளரும், பயின்றோர் கழக உறுப்பினருமான சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். ஓய்வுபெற்ற பேராசிரியர் நாராயண ராஜன், அலுவலர்கள் ராஜன் ஆதித்தன், நடராஜன், தபசுமணி, முருகன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள் சி.கவிதா, ஆரோக்கியமேரி பெர்னாண்டஸ், ராமஜெயலட்சுமி, ஏ.கவிதா, வாசுகி, மகேசுவரி, ராஜகுமாரி, மோதிலால் தினேஷ், லோக்கிருபாகர் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன் ஏற்புரை வழங்கினார். பயின்றோர் கழக மூத்த உறுப் பினர்கள் மரிய சாமு வேல், கணபதி, ஆறுமுகம், அலெக் சாண்டர், ராஜேந்திரன், சங்கர நாராயணன் ஆகியோர் புதிய செயற் குழு உறுப் பினர்களாக தேர்வு செய் யப் பட்டனர். கட்டுரை, பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது.

Tags:    

Similar News