உள்ளூர் செய்திகள்

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட காட்சி

நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்

Published On 2022-06-27 11:11 GMT   |   Update On 2022-06-27 11:11 GMT
  • கொங்கு மெயின் ரோட்டில் சுமார் 2000 நபர்களுக்கு மதிய அன்னதானம் வழங்கப்பட்டது.
  • சிவ சார்மிளா அறக்கட்டளை ஆசிரமத்திற்கு காலை உணவும் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

திருப்பூர் :

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனைப்படி திருப்பூர் ஒன்றிய இளைஞரணி சார்பாக பல்வேறு பகுதிகளில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் ஜி .கே. சங்கர் தலைமையில், திருப்பூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் சுகுமார் ஏற்பாட்டில் ஊத்துக்குளி தேனீஸ்வரர் பாளையம் பகுதியில் ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மற்றும் சிவ சார்மிளா அறக்கட்டளை ஆசிரமத்திற்கு காலை உணவும் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

கொங்கு மெயின் ரோட்டில் சுமார் 2000 நபர்களுக்கு மதிய அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட பொருளாளர் ராம்குமார், மாவட்ட ஆலோசகர் மாதேவன், அவினாசி ஒன்றிய தலைவர் கனகராஜ், மேற்கு மாநகரத் இளைஞர் அணி தலைவர் கிருஷ்ணன், மாவட்ட நிர்வாகி காளிமுத்து, மேற்கு மாநகர தொழில் நுட்ப அணி தலைவர் கௌதம் மற்றும் ஒன்றிய செயலாளர் கோல்டு பாண்டி ,திருப்பூர் ஒன்றிய இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ் ,ஒன்றிய கௌரவத் தலைவர் தினேஷ் ,கௌரவ ஆலோசகர் வசந்த் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் சதீஷ்குமார், கௌரி பிரகாஷ், லோகு, மருது ஈஸ்வரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ,பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News