உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் பொது இடங்களில் போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை

Published On 2023-03-07 09:24 GMT   |   Update On 2023-03-07 09:24 GMT
  • பொது இடங்களில், போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனபோலீசார் அறிவித்துள்ளனர். .
  • தமிழக முழுவதும் நகரப் பகுதி யில் விதிகளை மீறி பொது இடங்களில், போஸ்டர் ஒட்டி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது


கடலூர்:

பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி பொது இடங்களில், போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனபோலீசார் அறிவித்துள்ளனர்.  இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கூறியிருப்பதாவது:-  சென்னை உள்ளிட்ட தமிழக முழுவதும் நகரப் பகுதி யில் விதிகளை மீறி பொது இடங்களில், போஸ்டர் ஒட்டி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

எனவே பண்ருட்டி நகர பகுதியில் விதி களை மீறி யாரும் போஸ்டர், டிஜிட்டல் பேனர் ஆகியவை வைக்க கூடாது. இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News