உள்ளூர் செய்திகள்

கலெக்டர் பூங்கொடி.

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாதுகாக்க நடவடிக்கை

Published On 2023-07-18 12:04 IST   |   Update On 2023-07-18 12:04:00 IST
  • திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக் குழு கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது.
  • குழந்தைகள் பிச்சையெடுத்தல் மற்றும் சிறு தொழில்களில் ஈடுபடுதலை தடுக்கும் வகையில் பேருந்து நிலையங்கள், முக்கிய இடங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக் குழு கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் பூங்கொடி தெரிவித்ததா வது:-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் கடந்த ஏப்ரல் 2023 முதல் ஜுன் 2023 வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிக் குழந்தைகளுக்கு, குழந்தை திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் போதை பொருள் (கூலிப்) பயன்படுத்துவதை தடுத்தல் குறித்து விழிப்புணர்வு மற்றும் கடைகளில் சிறப்பாய்வு மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்திலுள்ள 306 ஊராட்சிகளிலும், 14 வட்டாரங்களிலும், 23 பேரூராட்சிகளிலும், 3 நகராட்சிகளிலும் குழ ந்தைகள் பாதுகாப்புக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தினை 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைப்படும் பொழுது குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். குழந்தைகள் பிச்சையெடுத்தல் மற்றும் சிறு தொழில்களில் ஈடுபடுதலை தடுக்கும் வகையில் பேருந்து நிலையங்கள், முக்கிய இடங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளிடையே, குழந்தைகளுக்கு மனநலம், குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுத்தல், தன்னம்பிக்கையை வளர்த்தல், போதைப் பொருட்களுக்கு அடிமையாதலை தடுத்தல், தன் சுத்தம் பேணுதல் குறித்தும், சைல்டுலைன் 1098 குறித்தும், விழிப்புணர்பு ஏற்படுத்த வேண்டும்.

வளரிளம் பருவ மாணவ, மாணவியர்களின் தனிப்பட்ட திறமை, சமூக பங்களிப்பு மற்றும் போட்டிகளில் சிறப்பாக பங்கேற்கும் ஒன்றியத்திற்கு 3 குழந்தைகள் என "இளம் மொட்டுக்கள்" அடையாளம் கண்டு, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கள் மற்றும் குழந்தைகள் வசிப்பிட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்களில் ஈடுபடுத்தலாம். பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆதர வாளர்களை பயன்படுத்த லாம் என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News