உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்கைளை படத்தில் காணலாம். 

விழுப்புரம் அருகே அதிரடி சோதனை: குடோனில் பதுக்கிய ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல்

Published On 2022-10-09 08:17 GMT   |   Update On 2022-10-09 08:17 GMT
  • விழுப்புரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
  • விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தனர்.

விழுப்புரம், அக்.9-

விழுப்புரம் மற்றும் விழுப்புரத்தை சுற்றி குட்கா பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை கொண்டு செல்வோரைப் பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. உமாசங்கர் (பொறுப்பு) தலைமை யிலான போலீசார் மற்றும் தனிப்படை பிரிவு போலீசார் அமைக்கப்பட்டு தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தனர்.

அதில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 500 கிலோ எடை கொண்ட குட்கா பான் மசாலா உள்ளிட்ட போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் இதற்கு காரணமான விழுப்புரம் கே. கே. ரோடு மாந்தோப்பு தெருவை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 23), கீழ்பெரும்பாக்கம் மீனாட்சி ரைஸ் மில் தெருவை சேர்ந்த சுல்தான் மைதீன் ஆகிய 2 பேரை பேரை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News