விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சாதனை
- தேசிய அளவிலான இறகு பந்தாட்ட போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது
- நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி ரேஷிகா கலந்து கொண்டு இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
நெல்லை:
தேசிய அளவிலான இறகு பந்தாட்ட போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோ வில் நடைபெற்றது. இதில இந்தியா முழுவதும் இருந்து வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இதில் நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி ரேஷிகா கலந்து கொண்டு இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
மேலும் சென்னையில் நடைபெற்ற தமிழக வாட்டர் போலோ அணிகளுக்கான தகுதி போட்டியில் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் கவின் சாய் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் முனைவர்.திருமாறன், முதல்வர் முருகவேள், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி, உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன் குமார் மாறும் பூச்சியம்மாள் மற்றும் ஆசிரி யர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.