உள்ளூர் செய்திகள்
விபத்து தடுப்பு நடவடிக்கை -சிவகிரியில் போலீஸ் ஏ.டி.எஸ்.பி. ஆய்வு
- சிவகிரியில் மதுரை - கொல்லம் செல்லும் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.
- இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசாருக்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை ஏ.டி.எஸ்.பி. கூறினார்.
சிவகிரி:
சிவகிரி காவல் நிலைய சரகம் சிவகிரியில் மதுரை - கொல்லம் செல்லும் நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்து நடைபெற்று வருகின்ற மொட்டை மலை பகுதி, பழைய காவல் நிலையம் அருகே, தொட்டிச்சிமலை ஆற்றுப் பாலம் அருகே, நெல் கொள்முதல் நிலையம் அருகே மற்றும் உள்ளார் பகுதியில் உள்ள இடங்களை தென்காசி தலைமையிடத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிவரதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலை மையிலான போலீ சாருக்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.