உள்ளூர் செய்திகள்
பால்குடம் எடுத்த வந்த பக்தர்கள்.
மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா
- பெண்கள் குதிரை ஆட்டத்துடன் பால்குடம், முளைப்பாரி, பூந்தட்டு எடுத்து வந்தனர்.
- திரளான பக்தர்கள் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வாய்மேடு மேற்கு பின்னை யடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது முன்னதாக பெண்கள் குதிரை ஆட்டத்துடன் பால்குடம், முளைப்பாரி, பூதட்டு எடுத்து வந்தனர்.
பின்பு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வண்ண மலர்களால் அலங்காரிக்கபட்ட மகாதீபாரதனை நடைபெற்றது இதில் ஏரளமான பெண்கள் கலந்து கொண்டு அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர் பின்பு அம்பாள் விதி உலா காட்சி நடைபெற்றது.