உள்ளூர் செய்திகள் (District)

சிறப்பு முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.

பாவூர்சத்திரத்தில் ஆதார் கார்டு திருத்த சிறப்பு முகாம்

Published On 2023-02-07 09:15 GMT   |   Update On 2023-02-07 09:15 GMT
  • பாவூர்சத்திரத்தில் ஆதார் கார்டு திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
  • சிறப்பு முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தென்காசி:

பாவூர்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதார் கார்டு திருத்த சிறப்பு முகாம் நடை பெற்றது. பாவூர்சத்திரம் துணை அஞ்சல் அதிகாரி ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் வரவேற்று பேசினார்.

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவரும், கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனரும், மாவட்ட கண் தான ஒருங்கிணைப்பாளருமான கே.ஆர்.பி. இளங்கோ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஓவியஆசிரியர் தமிழன் தொகுத்து வழங்கினார். முடிவில் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News