உள்ளூர் செய்திகள்

முத்துக்குமார்.

வாழப்பாடி அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

Published On 2023-01-09 07:54 GMT   |   Update On 2023-01-09 07:54 GMT
  • மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 35) என்பவரை வாழப்பாடி போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
  • கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த இவர், திடீரென தலைமறைவானார்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி சங்கர் பார்க் அருகே, கடந்த 2010-ம் ஆண்டு மாணவி ஒருவரை காதலிக்க வேண்டுமென வற்புறுத்திய வாலிபரை, அந்த மாணவியின் சகோதரரும், அவரது நண்பரும் இணைந்து கொலை செய்தனர்.

இந்த வழக்கில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 35) என்பவரை வாழப்பாடி போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த இவர், திடீரென தலைமறைவானார்.

இவரை கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து முத்துகுமாரை வாழப்பாடி போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News