உள்ளூர் செய்திகள்

4 ஆண்டு தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

Published On 2023-04-03 09:35 GMT   |   Update On 2023-04-03 09:35 GMT
  • கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரை, நேற்று நாமக்கல் நகர போலீசார் கைது செய்தனர்.
  • பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனர்.

நாமக்கல்:

நாமக்கல் கொசவப் பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் (வயது 36). இவர் கடந்த 2019-ம் ஆண்டு, ஒருவரிடம் காரை வாங்கி அடமானம் வைத்தார்.

இது தொடர்பான வழக்கில் நாமக்கல் கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனால் நாமக்கல் நகர போலீசார் அவரை தொடர்ந்து தேடி வந்தனர்.

கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரை, நேற்று நாமக்கல் நகர போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News