உள்ளூர் செய்திகள்
உத்தமபாளையம் அருகே கொத்தனாரை கல்லால் தாக்கிய வாலிபர் கைது
- நண்பருடன் அடிக்கடி ஒன்றாக மது குடித்து வந்தனர்.
- இந்தநிலையில் முன்பகையை மனதில் வைத்துக்கொண்டு கருப்பையாவை சிமிண்ட் கல்லால் தாக்கி ரத்தகாயம் ஏற்படுத்தினார்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் கருப்பையா(23). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். அவரது நண்பர் தினேஷ். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது குடித்து வந்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தினேஷ் கருப்பையாவை தாக்க முற்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது தாயிடம் கருப்பையா கூறியுள்ளார். இந்தநிலையில் தினேஷ் முன்பகையை மனதில் வைத்துக்கொண்டு கருப்பையாவை சிமிண்ட் கல்லால் தாக்கி ரத்தகாயம் ஏற்படுத்தினார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை விலக்கிவிட்டனர். தினேஷ் கருப்பையாவிடம் கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் தினேசை கைது செய்தனர். காயமடைந்த கருப்பையா உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.