உள்ளூர் செய்திகள்
திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
- திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- அதே ஊரைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அடுத்த டி.கொளத்தூரை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 33). இவர் தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் நிலத்திற்கு சென்றார். மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மீன்குட்டையை சுற்றிப்பார்த்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த ராமராஜ் (32) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றார். வீட்டிற்கு வந்த நீலகண்டன் ராமராஜை தேடினார்.
அவர் கிடைக்காததால், திரு வெண்ணைநல்லூர் போலீ சாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் ராமராஜை தேடிப்பிடித்து அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து நீலகண்டனிடம் கொடுத்தனர். மேலும், ராமராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.