உள்ளூர் செய்திகள்
சாராயம் பதுக்கி விற்ற வாலிபர் கைது
- சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள கரிய கோவில் குன்னூர் அடியனூர் கிராமத்தில் கரியகோயில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர்.
- இதையடுத்து 2 டியூப்களில் இருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் அவரது வீட்டில் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி யையும் பறிமுதல் செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள கரிய கோவில் குன்னூர் அடியனூர் கிராமத்தில் கரியகோயில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் லாசர்கென்னடி தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, தங்கராஜ் (வயது 41) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 2 டியூப்களில் இருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் அவரது வீட்டில் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி யையும் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.