உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபர் கைது

Published On 2023-03-29 11:05 IST   |   Update On 2023-03-29 11:05:00 IST
  • தமிழரசன். மனைவி ஆனந்தி (வயது 35). அதே ஊரை சேர்ந்தவர் மூர்த்தி (40). கூலி தொழிலாளி. ஆனந்தி நேற்று முன்தினம் வயல் வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த மூர்த்தி, ஆனந்தியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த கரும்பூரை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி ஆனந்தி (வயது 35). அதே ஊரை சேர்ந்தவர் மூர்த்தி (40). கூலி தொழிலாளி. ஆனந்தி நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வயல் வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மூர்த்தி, ஆனந்தியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News