உள்ளூர் செய்திகள்

நாங்குநேரியில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்த வாலிபர்

Published On 2023-03-23 14:43 IST   |   Update On 2023-03-23 14:43:00 IST
  • நாங்குநேரி ெரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று காலை வாலிபர் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.
  • அந்த வழியாக வந்த ெரயில் முன்பு தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

களக்காடு:

நாங்குநேரி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று காலை வாலிபர் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இதைப் பார்த்த பயணிகள் நாகர்கோவில் ரெயில்வே போலீசில் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அந்த வழியாக வந்த ரெயில் முன்பு தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News