உள்ளூர் செய்திகள்

கையை அறுத்து இளம்பெண் தற்கொலை முயற்சி- ரூ.6 லட்சம் வரை பறித்த கள்ளக்காதலன் மீது புகார்

Published On 2023-04-28 13:33 IST   |   Update On 2023-04-28 13:33:00 IST
  • இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
  • வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த திருமணமான 30 வயது இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

இளம்பெண்ணின் கணவர் அடிக்கடி வேலை தொடர்பாக வெளியூர் சென்றதால் இளம்பெண் வாலிபர் இடையேயான நட்பு கள்ளக்காதலாக மாறியது.

இதையடுத்து நெருங்கி பழகிய இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாகவும் கூறப்ப டுகிறது. இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய கள்ளக்கதாலன் இளம்பெண்ணிடம் இருந்து சிறுக சிறுக இதுவரை ரூ.6.லட்சம் வரை பணத்தை சுருட்டினார். மேலும் பணம் கேட்டு இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட கள்ளக்காதலன் உடனடியாக பணம் அனுப்ப வேண்டும் இல்லையென்றால் "இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை" சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் திடீரென வீட்டின் சமையலறைக்குள் சென்று கத்தியால் இடது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News