உள்ளூர் செய்திகள்

பெரியநாயக்கன்பாளையம் அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2023-06-26 15:11 IST   |   Update On 2023-06-26 15:11:00 IST
  • சஞ்சய்குமார் பெரிய நாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக உள்ளார்.
  • கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கோவை,

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் சஞ்சய்குமார். இவர் பெரிய நாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக உள்ளார். இவரது மனைவி பூர்ணிமா (வயது 23). இவர்களுக்கு கடந்த 1 அரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சம்பவத்தன்று தனது தாயை தொடர்பு கொண்ட இவர் கணவருடன் வீட்டிற்கு வருவதாக செல்போன் மூலம் தெரிவித்தார். ஆனால் செல்வதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பூர்ணிமா தனது அறைக்கு சென்றார். இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தூக்கு போட்டு தொங்கி னார். இதனை பார்த்து அவரது குடும்ப த்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக பூர்ணிமாவை மீட்டு கோவையில் உள்ள தனி யார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பூர்ணிமா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 1 அரை வருடத்ததில் பூர்ணிமா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News