உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பலி

Published On 2023-01-19 09:34 GMT   |   Update On 2023-01-19 09:34 GMT
  • மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் லிப்ட் கேட்டு உள்ளார்.
  • சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

கடலூர்:

சிதம்பரம் அடுத்த வடக்கு பிச்சாவரம் அரண்மனை தெருவை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் மனைவி சுமதி (வயது 50). கடந்த 13-ம் தேதி சித்தலாபாடி பஸ் நிறுத்தத்தில் இருந்து கொடிப்பள்ளம் செல்ல அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் லிப்ட் கேட்டு உள்ளார். அப்போது பின்னால் அமர்ந்து சென்ற சுமதி நற்கந்தங்குடி வாட்டர் டேங்க் அருகே தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டது. பின்னர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது கணவர் அளித்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News