உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே போதை பொருள் விற்ற பெண் கைது

Published On 2023-10-25 07:20 GMT   |   Update On 2023-10-25 07:20 GMT
  • போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.
  • ஏராளமான பாக்கெட்குட்காக்களை பறிமுதல் செய்தனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டை பகுதியில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போதுபுதுப்பேட்டை அடுத்த கொத்தி கிராமத்தில் பெட்டிக்கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டகுட்கா விற்பனை செய்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து ஜோதிலட்சுமி (39) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஏராளமான பாக்கெட்குட்காக்களை பறிமுதல் செய்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News