உள்ளூர் செய்திகள்

சாயர்புரத்தில் குப்பைக்கு தீ வைத்தபோது தீக்காயமடைந்த பெண் சாவு

Published On 2022-07-31 09:04 GMT   |   Update On 2022-07-31 09:04 GMT
  • அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
  • அங்கு சிகிச்சை பெற்று வந்த டெல்பின் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே பட்டாண்டிவிளை நேரு தெருவை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி டெல்பின் (வயது 51).

இவர்களது மகள் நியூனா (23). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 22-ந்தேதி டெல்பின் வீட்டு காம்பவுண்டக்குள் குப்பையை தீ வைத்து எரித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தீ டெல்பின் மீது பட்டு பலத்த தீகாயங்கள் ஏற்பட்டது. அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த டெல்பின் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News