உள்ளூர் செய்திகள்
ஆடலூர் பகுதியில் சோலார் மின்வேலியை சேதப்படுத்திய காட்டுயானை
- கடந்த 1 மாதமாக 10-க்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனியாக பிரிந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி பொதுமக்களை மிரட்டி வருகின்றன.
- தனியார் தோட்டங்களில் உள்ள காபி, வாழை மற்றும் சோலார் மின்வேலியை காட்டுயானைகள் சேதப்படுத்தியது.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான தாண்டிக்குடி. மங்களம்கொம்பு, கானல்காடு, தடியன்குடிசை, ஆடலூர், பெரியூர் பகுதிகளில் கடந்த 1 மாதமாக 10-க்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனியாக பிரிந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி பொதுமக்களை மிரட்டி வருகின்றன.
ஆடலூர், சோலைக்காடு, நேர்மலை பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் உள்ள காபி, வாழை மற்றும் சோலார் மின்வேலியை காட்டுயானைகள் சேதப்படுத்தியது.
தாண்டிக்குடி, ஆடலூர், பெரியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் உலாவரும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு மாவட்ட வன அலுவலர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.