உள்ளூர் செய்திகள்

கடலில் மூழ்கும் படகுகள்.

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக-புதுவை மீனவர்களின் படகுகள் கடல் நீரில் மூழ்கி சேதமாகும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு

Published On 2022-12-14 08:51 GMT   |   Update On 2022-12-14 08:51 GMT
  • பல்வேறு காலகட்டங்களில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தொடர்ந்து மீனவர்களை கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் வந்தனர்.
  • மீட்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி: 

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் ராமே ஸ்வரம், மண்டபம், புது க்கோட்டை, நாகப்பட்டினம், காரை க்கால் உள்ளிட்ட பகுதியில் இருந்து மீன்பி டிக்க செல்கின்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர், பல்வேறு காலகட்டங்களில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தொடர்ந்து மீனவ ர்களை கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் வந்தனர். இந்நிலையில், மீனவர்க ளை விடுதலை செய்தா லும், கடந்த சில மாதங்க ளாக இலங்கை கடற்படை யால் பறிமுதல் செய்ய ப்பட்ட விசைப் படகு களை அந்நாட்டு கோர்ட்டு உத்தர வுப்படி யாழ்ப்பாணம், முல்லைதீவு, மயிலடி உள்ளிட்ட துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படகுகளில் பெரு ம்பாலானவை தற்பொழுது சேதம் அடைந்து நீரில் மூழ்கி காணப்படும் வீடியோ வெளியாகி உள்ளது. குறிப்பாக மாண்டஸ் புயல் காரணமாக, விசைப்படகு கள் சேதமானதாக வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் வைர லாகி வருவதால், மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோக்களை பார்த்த காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சிலர், மீனவர்களின் வாழ்வா தாரமே பல லட்சம் செலவு செய்த படகுகளில் தான் உள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இல ங்கையில் சிறைப் படுத்தப் பட்டுள்ள தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் படகுகளை விரைந்து மீட்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News