திருவெண்ணைநல்லூர் அருகே கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது
- திருவெண்ணைநல்லூர் அருகே கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- விளம்பரம் மற்றும் நோட்டீஸ் கொடுக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.
விழுப்புரம்:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி குருவிவிளாம்பட்டியை சேர்ந்த ராமராஜ் மகன் ரவி கிருஷ்ணா (வயது 27). இவரும் காமராஜ், சூர்யா ஆகிய 3 பேரும் டாட்டா ஏசி வாகனத்தின் மூலம் டி.வி.எஸ்.விளம்பரம் மற்றும் நோட்டீஸ் கொடுக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியில் விளம்பரம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் ரவிகிருஷ்ணாவை கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போனை பறிக்க முயன்றனர். அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் 3 பேரை பிடிப்பதற்கு வரும்போது 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
ஒருவரை பிடிதது திருவெண்ணெய்நல்லூர் போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்ற கண்டம்பாக்கம் குணசேகர் மகன் முருகையன் (28) என்பவரை கைது செய்து, தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.