உள்ளூர் செய்திகள்

கோவையில் கிரிக்கெட் விளையாடிய வாலிபர் சாவு

Published On 2022-12-19 09:17 GMT   |   Update On 2022-12-19 09:17 GMT
  • கவுதம் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
  • நண்பர்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.

கோவை,

கோவை இடையர்பாளையம் பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் கவுதம் (வயது 26). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று கவுதம் தனது நண்பர்களுடன் கணுவாய் பகுதியில் உள்ள மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட சென்றார்.

அங்கு நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது திடீரென அவர் நிலைகுலைந்து மயங்கி சுருண்டு விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு டி.வி.எஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்ைசக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு கவுதமை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதை கேட்டு அவரது நண்பர்கள் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கவுதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வாலிபர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News