உள்ளூர் செய்திகள்

கோவையில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்

Published On 2023-04-23 08:54 GMT   |   Update On 2023-04-23 08:54 GMT
  • வாலிபர் சிறுமியிடம் உன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
  • போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பொள்ளாச்சி,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி.

இவர் 10-ம் வகுப்பில் பாதியில் நிறுத்தி விட்டு, வீட்டில் இருந்து வந்தார். சிறுமியின் பாட்டி வீடு பொள்ளாச்சியில் உள்ளது. இதனால் சிறுமி தனது பாட்டி வீட்டிற்கு வருவார்.

சிறுமியின் பாட்டி வீட்டின் அருகே வசந்தகுமார் (22) என்ற வாலிபர் வசித்து வந்தார். இவர் அடிக்கடி சிறுமியிடம் சென்று பேசி வந்தார்.

அப்போது சிறுமியிடம் நான் உன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து 2 பேரும் அடிக்கடி பேசி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறுமி தனது பாட்டியை பார்ப்பதற்காக பொள்ளாச்சிக்கு வந்தார். அங்கு சில நாட்கள் தங்கி இருந்தார்.

சம்பவத்தன்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை பார்த்த வசந்தகுமார், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டார். தொடர்ந்து இது போன்று அவர் செய்து வந்துள்ளார்.

மேலும் கடந்த 12-ந் தேதி சிறுமியை அழைத்து சென்று மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணமும் செய்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் அவரை உடும லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து டாக்டர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் ெகாடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிறுமி தனக்கு நடந்தவற்றை போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் சிறுமியை திருமணம் செய்து, பலாத்காரம் செய்த வாலிபர் வசந்தகுமார் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News