உள்ளூர் செய்திகள்
செட்டிப்பாளையம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்
- அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை
- வாலிபரை கொலை செய்து வீசினரா அல்லது இயற்கை மரணமா என்ற கோணத்தில் விசாரணை
கோவை,
கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள பொள்ளாச்சி- கோவை மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்ற விசாரணை நடத்தினர். பின்னர் அடையாளம் தெரியாத வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை யாராவது கொலை செய்து வீசி சென்றார்களா அல்லது நடந்து செல்லும் போது இயற்கை மரணம் ஏற்பட்டு இறந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.