உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கி வாலிபர் பலி

Published On 2023-03-07 09:52 GMT   |   Update On 2023-03-07 09:52 GMT
  • ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ராஜ்குமார் வேலை செய்து வருகிறார்.
  • சித்தா காலேஜ் அருகே சென்று கொண்டி ருந்தபோது சாலையில் இருந்த மண்ணில் சிக்கி 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

சேலம்:

சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டி கார் காடு பகுதி சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராஜ்குமார் (வயது 27). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ஈரோட்டில் உள்ள ஒரு தனி யார் நிறுவனத்தில் ராஜ்கு மார் வேலை செய்து வரு கிறார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 8.30 மணி அளவில் ராஜ்குமார் ஒரு மோட்டார் சைக்கிளில் இளம்பிள்ளை அருகே உள்ள எருமாத்தனூர் பகுதியைச் சேர்ந்த வெங்க டாசல மகன் தமிழ்ச்செல்வன் (23),பெரு மாம்பட்டி ஏரிக்காடு பகுதி சேர்ந்த பரமசிவம் மகன் வைத்தீஸ்வரன்(18) ஆகி யோருடன் சித்தர் கோயில் மெயின் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

தனியார் சித்தா காலேஜ் அருகே சென்று கொண்டி ருந்தபோது சாலையில் இருந்த மண்ணில் சிக்கி 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜ்கு மார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் தமிழ்ச்செல்வன் மற்றும் வைத்தீஸ்வரன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து புகாரின் பேரில் இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News