உள்ளூர் செய்திகள்

காரைக்காலில் சாலை விபத்தில் வாலிபர் பலி

Published On 2022-09-24 13:02 IST   |   Update On 2022-09-24 13:02:00 IST
  • காரைக்காலில் சாலை விபத்தில் வாலிபர் பலியானார்.
  • மாணவிகள் குறுக்கே வந்ததால், மாணவிகள் மீது மோதாமல் இருக்க, எதிர் திசையில் சென்றார்.

புதுச்சேரி:

காரைக்கால் சேத்திலால் நகரில் வசிப்பவர் அந்தோணி(வயது30). இவர் எலக்ட்ரிகல் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் ஆனது. நேற்று மதியம் உணவு சாப்பிடுவதற்காக, வேலை செய்யும் இடத்திலிருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். காரைக்கால் காமராஜர் சாலை- அல்லிக்குளத்து வீதி சந்திப்பில் சென்ற பொழுது, பள்ளி மாணவிகள் குறுக்கே வந்ததால், மாணவிகள் மீது மோதாமல் இருக்க, எதிர் திசையில் சென்றார்.

அப்போது எதிரே வந்த சேத்தூரை சேர்ந்த கதிரவன்(28) மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இந்த விபத்தில் அந்தோணி தூக்கிஎறியப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தோர். அந்தோணியை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நேற்று மாலை அந்தோணி சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து காரைக்கால் போக்குவரத்து காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News