உள்ளூர் செய்திகள்

கோவில் சுவரில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

Published On 2023-05-09 09:29 GMT   |   Update On 2023-05-09 09:29 GMT
  • கோவில் திருவிழாவிற்காக உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
  • படுகாயமடைந்த அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சுவாமிமலை:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தை சேர்ந்தவர் மோகன் மகன் தமிழ்வளவன் (வயது 28).

இவர் வங்கி பணிக்காக தேர்வு எழுதிவிட்டு வேலைக்காக காத்திருந்தார்.

இந்நிலையில் வில்லிய வரம்பலில் நேற்று இரவு நடந்த கோவில் திருவிழாவிற்காக உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது சுவாமி புறப்பாடு நடந்தது.

இதனை தமிழ்வளவன் கோவில் சுவர் மீது ஏறி வேடிக்கை பார்ப்பதற்காக மண்டபத்தில் இருந்த பொம்மையை பிடித்துக் கொண்டு ஏறி உள்ளார்.

இதில் பொம்மை உடைந்து எதிர்பாராத விதமாக வளவன் தவறி விழுந்தார்.

தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியில் தமிழ்வளவன் இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் நாச்சியார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News