ஆத்தூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
- ரெயில்வே தண்டவாளம் அருகே ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
- சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் பலியான நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள பட்டுத்துறை சேலம்- சென்னை-விருதாச்சலம் ரெயில்வே தண்டவாளம் அருகே ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் பலியான நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த நபர் பட்டுத்துறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் (36) என்பதும் இவர் நேற்று முன்தினம் கூலி வேலைக்கு செல்வதாக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது.
இதனை அடுத்து உயிரிழந்த சுந்தர்ராஜன் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.