உள்ளூர் செய்திகள்

கோவையில் நடுரோட்டில் வைத்து கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபர்

Published On 2023-02-23 15:18 IST   |   Update On 2023-02-23 15:18:00 IST
  • 23 வயது மாணவி. தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
  • வாலிபர் மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள கள்ளிமடையை சேர்ந்தவர் 23 வயது மாணவி. இவர் நவஇந்தியாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

மாணவி பள்ளியில் படிக்கும் போது வாலிபர் ஒருவருட ன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்தநிலையில் வாலிபரின் நடவடிக்கைகள் மாணவிக்கு பிடிக்காமல் போனது. இதனால் அவர் வாலிபரை காதலிப்பதை நிறுத்தினார். மேலும் அவருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். இது வாலிபருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு சென்று விட்டு ராமநாதபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வாலிபர் தனது நண்பர் ஒருவருடன் வந்தார்.

அவர் மாணவியை பின் தொடர்ந்து சென்று அவரிடம் பேச முயன்றார். ஆனால் மாணவி பேசாமல் நடந்து சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தகாத வார்த்தைகள் பேசி மாணவியை தாக்கினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

இது குறித்து மாணவி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபர் மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News