உள்ளூர் செய்திகள்

கோவையில் கல்லூரி மாணவியை நடுரோட்டில் தாக்கிய வாலிபர்

Published On 2023-07-28 09:30 GMT   |   Update On 2023-07-28 09:30 GMT
  • கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
  • போலீசார் சஞ்சயை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.

குனியமுத்தூர்,

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்தநிலையில் மாண விக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குனியமுத்தூரை சேர்ந்த சஞ்சய் (வயது 19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், பல்வேறு இடங்களுக்கு சென்றும் காதலை வளர்த்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் மாணவி சஞ்சயுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். இது வாலிபருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு சென்று விட்டு அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கு வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சஞ்சய் அவரிடம் பேசுமாறு கூறினார். ஆனால் மாணவி பேச மறுத்து விட்டார். இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த வாலிபர் நடுரோட்டில் வைத்து தகாத வார்த்தைகளால் பேசி மாணவியின் கன்னத்தில் தாக்கினார். பின்னர் அவர் மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

இது குறித்து மாணவி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலியை நடுரோட்டில் வைத்து தாக்கிய சஞ்சயை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News