உள்ளூர் செய்திகள்

செங்கற்கள் நனையாமல் இருக்க தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.

திடீரென பெய்த கோடை மழை; மெலட்டூர் பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிப்பு

Published On 2023-03-24 08:27 GMT   |   Update On 2023-03-24 08:27 GMT
  • தினசரி வருமானம் பாதிக்கப்பட்டு சிரமப்படும் நிலை உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
  • கல் தயார் செய்யவும் முடியவில்லை, தயார் செய்த கல்லை காய வைக்கவும் முடியவில்லை.

மெலட்டூர்:

மெலட்டூர் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் கோடைமழை காரணமாக செங்கல் உற்பத்தி செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால் செங்கல் உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமான தொழிலாளர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை யுடன் தெரிவித்துள்ளனர்.

பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர், சுரைக்காயூர், கோடுகிளி மற்றும் ஒன்பத்துவேலி உள்பட பல இடங்களில் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன கடந்த சில நாட்களாக பெய்து வரும் திடீர் கோடை மழையால் செங்கல் உற்பத்தி செய்யும் பணி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது இதனால் செங்கல் உற்பத்தி செய்யும்பணியில் ஈடுபட்டு வரும் ஏராளமான தொழிலாளர்கள் தினசரி வருமானம் பாதிக்கப்பட்டு சிரமப்படும் நிலை உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை யுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து செங்கல் தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது

பொதுவாக கோடை காலத்தில் தான் எங்களுக்கு செங்கல் தயார் செய்ய முடியும் இரண்டு பேர் சேர்ந்து ஆயிரம் பச்சகல் தயார் செய்யலாம் ஆயிரம் கல் தயார் செய்யலாம் அந்த கல்லை நன்றாக இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் காயவைத்து கொட்டகையில் அடுக்கி வைத்தால் தான் எங்களுக்கு ஆயிரம் ரூபாய்வரை கூலியாக கிடைக்கும் தற்போது தினசரி பெய்து வரும் மழையால் கடந்தசில நாட்களாக தயார் செய்து வைத்து பச்ச கல் எல்லாம் நனைந்து சேதமடைந்நு விட்டது தொடர்ந்து கல் தயார் செய்யவும் முடியவில்லை தயார் செய்த பச்ச கல்லையும் காயவைக்கவும் முடியவில்லை அதனால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்

செங்கல் தயார் செய்யும் தொழிலை நம்பியுள்ள ஏராளமான தொழிலாளர்கள் மழையால் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News