உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி திடீர் மாயம்
- 19 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை,
- இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் அடுத்த கட்டியாங்குப்பத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து திடீரென்று காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.