உள்ளூர் செய்திகள்

கலெக்டர் மடியில் அமர்ந்துகொண்டு இறங்க மறுத்து அடம்பிடித்த குழந்தை

Published On 2023-02-15 07:33 IST   |   Update On 2023-02-15 07:33:00 IST
  • அர்ஷத் என்னும் குழந்தை இன்னோவா காரில் செல்ல வேண்டுமென மாவட்ட கலெக்டரிடம் ஆசையாக கேட்டது.
  • அந்த குழந்தையை காப்பாளரிடம் கொடுத்துவிட்டு சென்றார்.

ஊட்டி :

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு குடப்புழு நீக்க மருத்துவ முகாம் நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி முடிந்து கலெக்டர் அம்ரித் திரும்பி செல்ல முயன்றபோது அந்த அங்கன்வாடி மையத்தில் இருந்த அர்ஷத் என்னும் குழந்தை இன்னோவா காரில் செல்ல வேண்டுமென மாவட்ட கலெக்டரிடம் ஆசையாக கேட்டது.

சிரித்த முகத்துடன் கேட்ட மழலையை ஏமாற்ற விரும்பாத கலெக்டர் அந்த குழந்தையை மடியில் அமர வைத்துக் கொண்டு அங்கன்வாடி மையத்தில் இருந்து கொஞ்ச தூரம் காரில் சென்றார். இதையடுத்து அந்த குழந்தையை அங்கன்வாடி மைய காப்பாளரிடம் கொடுக்க முயன்றபோது குழந்தை போக மாட்டேன் என்றும் காரை நிறுத்தாமல் ஓட்ட வேண்டும் என்று கூறி அடம்பிடித்தது.

இதையடுத்து குழந்தையிடம் சற்றுநேரம் கொஞ்சி பேசி சிரித்து விளையாடிய கலெக்டர், மற்றொரு நாள் வந்து வேறு இடத்துக்கு கூட்டி செல்வதாகவும் அங்கு யானை, புலி உள்ளிட்ட விலங்குகளை காண்பிப்பதாகவும் கூறி சமாதானப்படுத்தி அந்த குழந்தையை காப்பாளரிடம் கொடுத்துவிட்டு சென்றார். இந்த செயல் அங்கிருந்த பெற்றோர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Similar News