உள்ளூர் செய்திகள்

பேருந்தில் இருந்து இறங்கியவர் தவறி விழுந்து சாவு

Published On 2022-09-24 09:45 GMT   |   Update On 2022-09-24 09:45 GMT
  • மோகனூரில் இருந்து லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு வேலைக்கு தனியார் பஸ்ஸில் சென்றுள்ளார்.
  • அப்போது பஸ்சை விட்டு இறங்கும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பாலத்தை காயம் ஏற்பட்டது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம், மோகனூர் படையாட்சி நகரை சேர்ந்தவர் தனபால் . இவரது மனைவி கனகா (வயது 60). இவர் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் துப்புரவு வேலை பார்த்து வருகிறார், இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மோகனூரில் இருந்து லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு வேலைக்கு தனியார் பஸ்ஸில் சென்றுள்ளார்.

அப்போது பஸ்சை விட்டு இறங்கும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பாலத்தை காயம் ஏற்பட்டது. இதனால் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனை சேர்த்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் , இது குறித்து அவரது மகன் மூர்த்தி (வயது 30) என்பவர் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்கள்.

Tags:    

Similar News