சிங்கப்பெருமாள் கோவில் அருகே மின்சார ரெயில் முன்பாய்ந்து நர்சிங் மாணவி தற்கொலை
- சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள திருக்கச்சூர், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து.
- மாணவி நிரோஷாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள திருக்கச்சூர், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் நிரோஷா (வயது20).
பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை அவர் கல்லூரிக்கு செல்வதற்காக சிங்கப்பெருமாள் கோவில் ரெயில்வே கேட் அருகே உள்ள தண்டவாள பகுதியில் நடந்து சென்றார். அப்போது திருமால்பூரில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற விரைவு மின்சார ரெயிலின் மீது திடீரென நிரோஷா பாய்ந்தார். இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். முதலில் நிரோஷா தற்கொலை செய்தாரா? அல்லது விபத்தா? என்ற சந்தேகத்தில் செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர் தற்கொலை செய்து இருப்பதை ரெயில்வே போலீசார் உறுதிபடுத்தி உள்ளனர்.
இது குறித்து ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, மாணவி நிரோஷா ரெயில் வருவது தெரிந்தும் தண்டவாளத்தில் போய் நின்றார் என்றார்.
மாணவி நிரோஷாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.