உள்ளூர் செய்திகள்

நர்சு விழிமலர்.

திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த நர்சு - கொலையா? என போலீசார் விசாரணை

Published On 2023-10-12 11:55 IST   |   Update On 2023-10-12 11:57:00 IST
  • அம்பாத்துரை ரெயில் நிலையத்திற்கு அருகே ரெயில் தண்டவாளத்தில் விழிமலர் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
  • செவிலியர் அந்த வழியாக வந்த ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சின்னாளப்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி வரதராஜாநகரை சேர்ந்த மாரிமுத்து மகள் விழிமலர் (வயது 41). திருமணமாகாத இவர் காந்திகிராமத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக கடந்த 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.

மேலும் மன உளைச்சலுடனே இருந்துள்ளார். நேற்று இரவு தனது அம்மா ஈஸ்வரியிடம் மருத்துவமனைக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அங்கு செல்லவில்லை.

இதனிடையே இன்று காலை அம்பாத்துரை ரெயில் நிலையத்திற்கு அருகே ரெயில் தண்டவாளத்தில் விழிமலர் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த செவிலியர் அந்த வழியாக வந்த ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News