உள்ளூர் செய்திகள்

சூலூரில் வாகனம் மோதி வடமாநில வாலிபர் பலி

Published On 2022-11-27 09:19 GMT   |   Update On 2022-11-27 09:19 GMT
  • துர்கேஷ் யாதவ் செலக்கரச்சலில் கோழி பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.
  • சுல்தான்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர்:

ஜார்கண்ட் மாநிலம் ஜராகிப்ஸ் தண்டை பகுதியை சேர்ந்தவர் துர்கேஷ் யாதவ்(20). இவர் சூலூர் அடுத்த செலக்கரச்சல் பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் வேலை பார்தது வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து தங்கி இருக்கும் அறைக்கு அவர் செலக்ரச்சல் அருகே சாலையில் நடந்து சென்றார்.

அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த துர்கேஷ் யாதவ்வை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துர்கேஷ் யாதவ் உயிரிழந்தார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News