உள்ளூர் செய்திகள்

கோவையில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி

Published On 2023-04-27 14:49 IST   |   Update On 2023-04-27 14:49:00 IST
  • பிண்டு பீளமேடு சிட்ராவில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார்.
  • பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிண்டு (வயது 25). கட்டிட தொழிலாளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் பீளமேடு சிட்ராவில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று பிண்டு வேலை செய்து கொண்டு இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.

அப்போது அவரது இடது கால் அந்த வழியாக சென்ற மின்சார வயரில் பட்டது. கண்இமைக்கும் நேரத்தில் பிண்டுவை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் பிண்டு பரிதாபமாக இறந்தார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News